செய்திகள்
கைதான வாலிபர்களை படத்தில் காணலாம்.

திருடிய மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்த வாலிபர்கள் கைது

Published On 2021-09-11 09:23 GMT   |   Update On 2021-09-11 09:23 GMT
2 பேரும் நகையை பறித்து விட்டு உதயமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
திருப்பூர்:

திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி தனது மனைவி மாலதியுடன் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பஸ்நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் மாலதி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நகையை பறித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் சிற்றரசன் கோட்டை பகுதியில் இதுபோல் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்-மனைவியை பின்தொடர்ந்து  சென்று  4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.

2 பேரும் நகையை பறித்து விட்டு உதயமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் 2 பேரும் திருப்பூரில் பதுங்கி இருந்ததாகவும், மோட்டார் சைக்கிள்களை திருடி அந்த மோட்டார் சைக்கிளில் சென்று செயின் பறிப்பில் ஈடுட்டதாகவும் தெரிவித்தனர். 

திருப்பூரில் இதுவரை நடந்துள்ள செயின் பறிப்பில் இருவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News