செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

Published On 2020-10-23 05:13 GMT   |   Update On 2020-10-23 05:13 GMT
திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
சென்னை:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

* திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும்.

* நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது. அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

* தயாரிப்பாளர், இயக்குநர், வினியோகஸ்தர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News