செய்திகள்
டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் இன்று உரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரையாடலின்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுமுறை குறித்து இரு நாட்டு பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், காஷ்மீரை பொறுத்தவரை ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த சில தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசி வருவதாக பிரதமர் மோடி தனது குற்றச்சாட்டை டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.