செய்திகள்
உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் பலி - விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவு
உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக பலியாகினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று மாலை ஒரு கும்பல் கள்ளச் சாராயம் குடித்துள்ளது. அதில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் சம்பவ பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.