செய்திகள்
மு.க. ஸ்டாலின்

இன்று 25 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

Published On 2021-09-12 15:58 GMT   |   Update On 2021-09-12 15:58 GMT
மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் இன்று 40 ஆயிரம் மையங்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் ‘‘கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News