செய்திகள்
வேதாரண்யம் அருகே விஷம் குடித்த ஏ.டி.எம். காவலாளி பலி
வேதாரண்யம் அருகே விஷம் குடித்த ஏடிஎம் காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு தெற்கு பகுதியை சேர்ந்தவர் வேதையன் (வயது 50). இவர் தோப்புத்துறை மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நில பிரச்சனை மற்றும் தம்பி மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் மானங்கொண்டான் ஆற்றுகரைப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த வேதையனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.