ஆன்மிகம்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை கொண்டு வந்த பெண்கள்

Published On 2021-01-05 02:51 GMT   |   Update On 2021-01-05 02:51 GMT
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கும்ப ஜெபம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஜெபம், சஹஸ்ரநாம அர்ச்சனை. இரவு 7.00 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு, ஆண்டாள் எதிர் சேவை நடைபெற்றது. 

7.30 சுவாமிக்கும், ஆண்டாளுக்கும் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 9 மணிக்கு தீபாராதனை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News