செய்திகள்
கோப்புபடம்.

தேவனூர்புதூர் - கொளத்துப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-10-12 07:22 GMT   |   Update On 2021-10-12 07:22 GMT
திருப்பூர் கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 13 - ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- 

செல்லப்பம்பாளையம், கரையாம்பாளையம், நல்லூர், பொன்னாண்டக்கவுண்டனூர், தொண்டாமுத்தூர். இதேப்போல் திருப்பூர் கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை குமாரபாளையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தாராபுரம் செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News