செய்திகள்
காரைக்குடி கண்டனூரில் வாக்களித்த ப.சிதம்பரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்- ப.சிதம்பரம் உறுதி

Published On 2021-04-06 07:38 GMT   |   Update On 2021-04-06 08:06 GMT
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது சொந்த ஊரான காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் தனது வாக்கை பதிவு செய்தார். அங்குள்ள சிட்டாள் ஆச்சி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அவர் வாக்களித்தார்.


அதன்பின்னர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

நான் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

காரைக்குடி தொகுதியும் அந்த வழியிலே மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தில் மக்களிடையே உள்ள ஆட்சி மாற்றம் தேவை என்ற ஆர்வம், வேகம் எங்களுக்கு புரிகிறது. அந்த ஆர்வமும், வேகமும், தேவையும் இந்த தேர்தலிலே பிரதிபலித்து மே மாதம் 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்போது நாங்கள் சொன்னது உண்மை என மெய்ப்பிக்கப்படும் என்பதை நான் இங்கு அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News