செய்திகள்
தூசி அருகே செல்லியம்மன் கோவில் திருவிழாவில் கைவிரல் நசுங்கி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமம் மீனவர் தெருவைச் சேர்ந்தவர் ராமன் (வயது 48), கூலித்தொழிலாளி. கிராமத்தில் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த செல்லியம்மன் கோவில் திருவிழாவில் இவருடைய கைவிரல் நசுங்கி 3 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.