செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்

Published On 2021-02-23 21:24 GMT   |   Update On 2021-02-24 06:36 GMT
திருப்பூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் தாசில்தார்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாராபுரம் கோட்ட கலால் அதிகாரியாக இருந்த முருகதாஸ் திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தனிதாசில்தாராகவும், திருப்பூர் கலெக்டர் அலுவலக தேர்தல் தாசில்தாராக இருந்த ரவீந்திரன் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கிடங்கு மேலாளராகவும், தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம் உடுமலை தாசில்தாராகவும், உடுமலை தாசில்தாராக இருந்த ஜெய்சிங் சிவக்குமார் திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், ஊத்துக்குளி தாசில்தாராக இருந்த தமிழ்செல்வன் அவினாசி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஊத்துக்குளி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த கலாவதி ஊத்துக்குளி தாசில்தாராகவும், உடுமலையில் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த கணேசன் மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக இருந்த தயானந்தன் உடுமலை குடிமைப்பொருள் தனிதாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

உடுமலை குடிமைப்பொருள் தனிதாசில்தாராக இருந்த விவேகானந்தன் உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராகவும், திருப்பூர் வடக்கு தாசில்தாராக இருந்த பாபு திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், அவினாசி தாசில்தாராக இருந்த ஜெகநாதன் திருப்பூர் வடக்கு தாசில்தாராகவும், திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கு மேலாளராக இருந்த ரவிச்சந்திரன் தாராபுரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News