செய்திகள்
விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை- ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பு
விவசாயிகள் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடகர் கூறியதாவது:-
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடகர் கூறியதாவது:-
பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ரபி பருவ விதைப்புக்கு முன்பாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த 5300 காஷ்மீரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5.5. லட்சம் ரூபாய் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.