செய்திகள்
விபத்து

நெல்லை அருகே பஸ் மோதி முதியவர் பலி

Published On 2021-11-13 10:47 GMT   |   Update On 2021-11-13 10:47 GMT
நெல்லை அருகே பஸ் மோதியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:

கங்கைகொண்டான் நான்கு வழி சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News