செய்திகள்
கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது

Published On 2020-10-31 14:26 GMT   |   Update On 2020-10-31 14:26 GMT
லால்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
லால்குடி:

லால்குடி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோரை பார்க்க மாணவி தனியாக சென்று கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 36) என்ற செங்கல் சூளை தொழிலாளி மாணவியை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

உடனே, அந்த சிறுமி கூச்சலிடவே பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்தாள். இதுதொடர்பாக லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்காக அந்த சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tags:    

Similar News