செய்திகள்
மரணம்

15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலி

Published On 2021-04-30 10:18 GMT   |   Update On 2021-04-30 10:18 GMT
15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

பொள்ளாச்சி ஜமீன் முத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 55). கட்டிடத்தொழிலாளி. இவர் நேற்று ஊஞ்ச வேலம்பட்டியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். 15 அடி உயரத்தில் வேலை செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதைப்பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News