செய்திகள்
கோப்புபடம்

பணகுடி அருகே விபத்தில் காயமடைந்த முதியவர் பலி

Published On 2020-10-17 10:45 GMT   |   Update On 2020-10-17 10:45 GMT
பணகுடி அருகே விபத்தில் காயமடைந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி:

பணகுடி அருகே ரோஸ்மியாபுரத்தில் கடந்த 13-ந்தேதி முத்துராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் சென்ற நதிப்பாறையை சேர்ந்த சுப்பையா (வயது 65) என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். 

இவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News