செய்திகள்
தற்கொலை

கருப்பு பூஞ்சை பாதித்து சிகிச்சை: பட்டறை தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-13 12:54 GMT   |   Update On 2021-10-13 12:54 GMT
கோவை அருகே பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர்:

கோவை குரும்பப்பாளையம் லஷ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் சிவநேசன் (வயது41). நகை பட்டறை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News