செய்திகள்
சங்காபிஷேக பூஜை நடைபெற்ற காட்சி.

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2021-11-22 10:06 GMT   |   Update On 2021-11-22 10:06 GMT
108 வலம்புரி சங்குகள் அபிஷேகத்திற்காக சிவன் வடிவில் அலங்காரம் செய்து சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
உடுமலை:

கார்த்திகை மாத திங்கட்கிழமையையொட்டி உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடந்தது. நிகழ்ச்சியானது காலையில் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 

கலச பூஜை மற்றும் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. 108 வலம்புரி சங்குகள், அபிஷேகத்திற்காக சிவன் வடிவில் அலங்காரம் செய்து சங்காபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News