செய்திகள்
அப்ரிடி

இந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி

Published On 2019-09-19 06:56 GMT   |   Update On 2019-09-19 06:58 GMT
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடி இந்திய வீரர் ஒருவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சகீத் அப்ரிடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விராட் கோலிக்கு எனது பாராட்டுக்கள், உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த வீரர் ஆவார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு தனது அபாரமான ஆட்டம் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோலி மீண்டும் அனைத்து வகையான சர்வதேச போட்டியில் 50 ரன்னுக்கு மேல் சராசரியை தொட்டுள்ளார். டெஸ்டில் 53.14, ஒரு நாள் போட்டி 60.31, 20 ஓவரில் 50.85 ஆக சராசரி இருக்கிறது.
Tags:    

Similar News