செய்திகள்
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை கடந்தது
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,723 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 2,650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 546 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பெண்கள், 12 ஆண்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 5 ஆண்கள் உள்பட 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,723 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை 85,429 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 14,324 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 2,650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 546 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பெண்கள், 12 ஆண்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 5 ஆண்கள் உள்பட 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 793 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,723 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை 85,429 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 14,324 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.