செய்திகள்
கைது

வேப்பந்தட்டை அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2021-11-20 12:25 GMT   |   Update On 2021-11-20 12:25 GMT
வேப்பந்தட்டை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டியில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கள்ளப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது குடிநீர் கிணறு அருகே கள்ளப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 7 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News