இந்தியா
திருப்பதி மலை

திருப்பதி மலையில் வெப்பக்காற்றால் ஏற்படும் தீ விபத்தை தடுக்க குழு

Published On 2022-01-29 06:30 GMT   |   Update On 2022-01-29 06:30 GMT
திருப்பதி மலையில் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அதிக சேதத்தை தடுக்க தயாராக இருக்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறினார்.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானத்தில் பேரிடர் மேலாண்மை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் நடந்தது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 3 முக்கியமான சவால்கள் உள்ளன. மழையால் கடும் சேதம் ஏற்படுகிறது.

வெப்பக் காற்றினால் தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் எவ்வளவு அதிகரித்தாலும் அதனை திறம்பட கையாளுவதற்கான பாதுகாப்பு அமைப்பு நம்மிடம் உள்ளது.

அதேபோல் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அதிக சேதத்தை தடுக்க தயாராக இருக்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்காக கண்காணிப்பு என்ஜினியர் ஜெகதீஸ்வரன் தலைமையில் போக்குவரத்து மண்டல மேலாளர் ரவிசங்கர், எஸ்டேட் அதிகாரிகள் மல்லிகார்ஜுன, ஸ்வேதா, இயக்குனர் மற்றும் மண்டல அலுவலர் பிரசாந்தி ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்படும்.

திருமலையில் நிகழக்கூடிய ஒவ்வொரு பேரிடருக்கும் உடனே துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக 4 நாளில் ஒவ்வொரு துறைகளுக்கும் பாதுகாப்பு குழுவை உருவாக்கி அதை குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த வாரத்திற்குள் இக்குழு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News