உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்

Published On 2022-04-15 09:53 GMT   |   Update On 2022-04-15 10:14 GMT
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூபாய் 1 லட்சம் கொள்ளை போனது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி மலையப்பபுறம் பகுதியை சேர்ந்தவர் இந்திராகாந்தி வயது54.

இவர் முசிறியில் இருந்து துறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக முசிறி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஏறி சென்றுள்ளார்.

அவர் கையில் கொண்டு வந்த மஞ்சள் பையில் ரூ.1 லட்சம் பணம் கொண்டு வந்துள்ளார்.  இந்த நிலையில் பயணத்தின் போது மீண்டும் தான் கொண்டு வந்த பண பையை சோதனை செய்த பார்த்துள்ளார். அப்போது உள்ளே வைத்திருந்த ரூ.1லட்சத்தை காணவில்லை.  

இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராகாந்தி இது குறித்து  முசிறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் முசிறி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணத்தின் போது யாரும் இந்திராகாந்தியிடம் பேச்சு கொடுத்து  பணத்தை கொள்ளையடித்து சென்றார்களா அல்லது வேறு காரணமா என போலீசார் பலகோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றளர்.
Tags:    

Similar News