ஆன்மிகம்
திருமலையில் பவித்ரோற்சவம் 2-வதுநாள்: பவித்ர மாலைகள் சமர்ப்பணம்
திருமலையில் பவித்ரோற்சவம் 2-வதுநாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை ஹோம பூஜைகள், காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
கோவிலில் உள்ள மூலவர் ஏழுமலையான், கருடாழ்வார், வரதராஜசாமி, வகுளமாதா, யோகநரசிம்மர், யாக சாலை, தங்கக் கோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்பட பல்வேறு சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது. பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது.
அதில் பெரியஜீயா்சுவாமி, சின்னஜீயர்சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படைத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவிலில் உள்ள மூலவர் ஏழுமலையான், கருடாழ்வார், வரதராஜசாமி, வகுளமாதா, யோகநரசிம்மர், யாக சாலை, தங்கக் கோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்பட பல்வேறு சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டன. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது. பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை யாக சாலையில் வைதீக காரியகர்மங்கள் நடந்தது.
அதில் பெரியஜீயா்சுவாமி, சின்னஜீயர்சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படைத்துறை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.