லைஃப்ஸ்டைல்
மலபார் பரோட்டா

வீட்டிலேயே மலபார் பரோட்டா செய்யலாம்

Published On 2021-08-31 09:15 GMT   |   Update On 2021-08-31 09:15 GMT
கேரள மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் சுவையான மலபார் பரோட்டாவை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

மைதா மாவு - அரை கிலோ,
முட்டை (விருப்பப்பட்டால்) - ஒன்று,
பால் - 100 மில்லி,
தயிர் - 50 மில்லி,
தூள் உப்பு, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து எடுக்கவும்.

பின்னர் மீண்டும் பரோட்டாவாக தட்டி வைக்கவும்...

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.

சூப்பரான மலபார் பரோட்டா ரெடி.
Tags:    

Similar News