செய்திகள்
ரெயில் மோதி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). பெயிண்டர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.இன்று காலை அதே பகுதியில் ரெயில் தண்டவாளத்தை கடந்து டீக் கடைக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.
இதில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.