தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி

அக்டோபர் விற்பனையில் அபாரம் - இரண்டாவது இடத்தில் ரியல்மி

Published On 2021-12-13 04:18 GMT   |   Update On 2021-12-13 04:18 GMT
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.


ரியல்மி நிறுவனத்தின் அக்டோபர் மாத ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர்பாயிண்ட் எனும் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் ரியல்மி நிறுவனம் இந்தியாவின் இண்டாவது மிகப்பெரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 18 சதவீதம் பங்குகளை பெற்று அசத்தியிருக்கிறது.

ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ரியல்மி 52 சதவீத பங்குகளுடன் முதலிடம் பிடித்தது. மற்ற ஆன்லைன் வலைதளங்களை சேர்க்கும் போது ரியல்மி 27 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 



ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையிலான 5ஜி போன் பிரிவில் ரியல்மி 8எஸ் 5ஜி அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தை சியோமி பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் சந்தையில் 20 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 

சியோமி, ரியல்மி நிறுவனங்களை தொடர்ந்து 16 சதவீத பங்குகளுடன் சாம்சங் மூன்றாவது இடத்திலும், 13 சதவீத பங்குகளுடன் விவோ நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. முன்னதாக ரியல்மி நிறுவனம் உலகம் முழுக்க 10 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை எனும் மைல்கல்லை எட்டியது.

Tags:    

Similar News