செய்திகள்
40 கிலோ புகையிலை பொருட்களுடன் முதியவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில்-முத்தூர் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் குமரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செல்வம் (வயது 66) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 வகையான 40 கிலோ மசாலா புகையிலை பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக தனது மொபட்டில் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து மொபட், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.