செய்திகள்
சோனியா காந்தி

மக்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள் - சோனியா காந்தி காட்டம்

Published On 2020-08-29 11:46 GMT   |   Update On 2020-08-29 11:46 GMT
நாட்டில் வெறுப்புணர்வு பரப்பும் சக்திகள் மக்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

‘மக்கள் சண்டையிட்டு கொள்ள வேண்டும் என விரும்பும் சக்திகள் நாட்டில் வெறுப்புணர்வு என்ற நஞ்சை பரப்பி வருகின்றன.

கருத்து சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்கள், நமது பழங்குடிகள், பெண்கள், இளைஞர்கள் வாயைப்பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என அவர்கள் (வெறுப்புணர்வை பரப்பும் சக்திகள்) நினைக்கிறார்கள். 

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் ஆபத்தில் உள்ளது. நாடு இப்படியொரு கடினமான சூழ்நிலையை சந்திக்கும் என மகாத்தா காந்தி, ஜவர்கலால் நேரு, அம்பேத்கார் உள்பட நமது மூதாதையர்கள் யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.    

Tags:    

Similar News