ஆன்மிகம்
புனித சவேரியார்

புனித சவேரியார் ஆலய விழா

Published On 2020-09-09 05:25 GMT   |   Update On 2020-09-09 05:25 GMT
சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித சவேரியார் ஆலய விழா நடந்தது.விழாவில் வேம்பார்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.
சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித சவேரியார் ஆலய விழா நேற்று நடந்தது. விழாவில் இயேசு கிறிஸ்து, மாதா, புனித சவேரியார், புனித செபஸ்தியார், புனித சூசையப்பர் உள்ளிட்ட புனிதர்களின் சிலைகள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்குதந்தை அந்தோணி புதிய சிலைகளுக்கு பூஜை செய்தார். இதை தொடர்ந்து நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் கலந்து கொண்டு புனிதர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் வேம்பார்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News