செய்திகள்
கைது

ஊத்துக்கோட்டையில் காரில் குட்கா கடத்தல்:  2 பேர் கைது

Published On 2019-10-06 09:31 GMT   |   Update On 2019-10-06 09:31 GMT
ஊத்துக்கோட்டையில் காரில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ராக்கிகுமாரி ஆகியோர் அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.

காரில் இருந்த கும்மிடிப்பூண்டி அருகே புதூர் கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன். ஆந்திர மாநிலம் சக்திவேடு பாபுஜிநகரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்கள் பெங்களூரில் இருந்து ஆந்திரா வழியாக குட்காவை கடத்தி வந்து கூடுவாஞ்சேரிக்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரிந்தது.

Tags:    

Similar News