செய்திகள்
வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48

Published On 2019-12-11 10:01 GMT   |   Update On 2019-12-11 10:14 GMT
இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளின் 9 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 திட்டமிட்ட நேரப்படி இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டா:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது.

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.



இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோள், அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப்பட்டன.


Tags:    

Similar News