செய்திகள்
கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம்

உங்களை 56 தடுத்து நிறுத்த முடியாது- ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் எழுதிய பிறந்தநாள் கடிதம்

Published On 2019-09-16 04:20 GMT   |   Update On 2019-09-16 04:20 GMT
சிறையில் இருக்கும் தனது தந்தை ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார்.

2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு நடந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கியதுடன், பாஜக அரிசின் 100 நாள் செயல்பாடுகள், பிரதமர் மோடியின் 56 இஞ்ச் மார்பளவை சுட்டிக் காட்டியும் விமர்சித்துள்ளார்.



“உங்களுக்கு 74 வயது ஆகிறது. உங்களை 56 என்றும் தடுக்க முடியாது. வீட்டில்  நீங்கள் இல்லாதது எங்களின் இதயத்தை நொறுக்கி உள்ளது. வீடு திரும்பும்போது கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடலாம்.

தங்களின் வயதான 74ஐ ஒப்பிடுகையில் 100 ஒன்றும் பெரிதல்ல. அரசியல் நாடகத்திற்கு எதிராக உண்மையின் துணையுடன் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டா போல் வெளிவருவீர்கள். உண்மையின் வெற்றிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News