தொழில்நுட்பம்
வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா கட்டணம் டிசம்பர் முதல் உயர்கிறது

Published On 2019-11-19 05:15 GMT   |   Update On 2019-11-19 05:15 GMT
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.



வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. டெலிகாம் துறையில் அந்நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக விலை உயர்வு பற்றி முடிவு எட்டப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை உயர்வு பற்றி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சேவை கட்டணம் எத்தனை சதவிகிதம் வரை உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றும் முயற்சிகளில் இந்நிறுவனம் தொடர்ந்து இந்தியா முழுக்க சீரான மொபைல் சேவையை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.



முன்னதாக வோடபோன் நிறுவனம் இந்திய வியாபாரத்தை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என வோடபோன் கூறியது. மேலும் இந்திய சந்தையை விட்டு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.

"வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்க, வோடபோன் ஐடியா தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1, 2019 முதல் உயர்த்த இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சேவைகளை துவங்கி 30 கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து முதலீடு செய்வோம்," என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

Tags:    

Similar News