லைஃப்ஸ்டைல்
பட்டாணி மசாலா கூட்டு

பட்டாணி மசாலா கூட்டு

Published On 2021-03-01 09:51 GMT   |   Update On 2021-03-01 09:51 GMT
தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பட்டாணி மசாலா கூட்டு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பட்டாணி - 2 கப்
சின்னவெங்காயம் - அரை கப்
நெய் - 4 டீஸ்பூன்
கருவாப்பட்டை - 1
சீரகம் - அரை டீஸ்பூன்
கல் உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி - 3
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும்.

அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகுவரை வதக்கவும்.

பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக கிளறவும்.

பின்னர் தக்காளி, பட்டாணியை அடுத்தடுத்து கொட்டி நன்றாக வதக்கவும்.

வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சூப்பரான பட்டாணி மசாலா கூட்டு ரெடி.

குறிப்பு: பாக்கெட்டில் அடைத்து விற்கும் பட்டாணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News