தொழில்நுட்பம்
ஏர்டெல்

விரைவில் வீடியோ கான்பரன்சிங் ஆப் வெளியிடும் ஏர்டெல்

Published On 2020-07-06 10:45 GMT   |   Update On 2020-07-06 10:45 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனமும் சொந்தமாக வீடியோ கான்பரன்சிங் செயலி ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனக்கென சொந்தமாக வீடியோ கான்பரன்சிங் செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இதனை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தற்சமயம் ஊரடங்கு காரணமாக ஜூம், கூகுள் ஹேங்அவுட்ஸ், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற வீடியோ கான்பரன்சிங் செயலிகள் அதிக பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனக்கான வீடியோ கான்பரன்சிங் செயலியை ஜியோமீட் எனும் பெயரில் அறிமுகம் செய்தது.



இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை போன்றே பாரதி ஏர்டெல் நிறுவனமும் வீடியோ கான்பரன்சிங் செயலி கொண்ட டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த செயலி கட்டண அடிப்படையிலும், பின் வரவேற்புக்கு ஏற்ப வழக்கமான செயலியாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ கான்பரன்சிங் செயலி தவிர ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வர்த்தகம் சார்ந்த சேவைகளை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 2500 பெரும் நிறுவனங்கள் மற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிக சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.

புதிய வீடியோ கான்பரன்சிங் செயலி பயனர் விவரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர்டெல் புதிய சேவை அதிநவீன AES 256 ரக என்க்ரிப்ஷன் கொண்டிருக்கும் என்றும் இது மொபைல் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News