ஆன்மிகம்
சாணார்பட்டியில் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழா
சாணார்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் அன்னை மரியாள் பிறந்தநாள் விழா நடந்தது. கூட்டுத்திருப்பலியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் அன்னை மரியாள் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றப்பட்டது. தினந்தோறும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
கொசவபட்டி வட்டார பங்கு தந்தை அந்தோணி, உதவி பங்கு தந்தை சைமன் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். நேற்று நடந்த கூட்டுத்திருப்பலியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். வழக்கமாக நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மரியாள் தேர்பவனி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
கொசவபட்டி வட்டார பங்கு தந்தை அந்தோணி, உதவி பங்கு தந்தை சைமன் ஆகியோர் திருப்பலியை நடத்தினர். நேற்று நடந்த கூட்டுத்திருப்பலியில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். வழக்கமாக நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மரியாள் தேர்பவனி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.