செய்திகள்
சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

தணிகை போளூரில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

Published On 2020-10-30 11:17 GMT   |   Update On 2020-10-30 11:17 GMT
தணிகை போளூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரக்கோணம்:

அரக்கோணம் ஒன்றியம் தணிகை போளூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்யூர் கிராமத்தில் பிரச்சினைக்குரிய இடத்தையும் பார்வையிட்டார். ஆய்வின்போது தாசில்தார் கணேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி, உதவி பொறியாளர் துரைபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News