செய்திகள்
வாழப்பாடி அருகே விபத்தில் விவசாயி பலி
வாழப்பாடி அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே சிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 67), விவசாயி. இவர் கடந்த மாதம் 23-ந் தேதி சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சேஷன் சாவடி அருகே வளைவில் திரும்பியபோது எதிர்பாராவிதமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.