உள்ளூர் செய்திகள்
புதுவையில் தீவிரமாக பரவும் கொரோனா-- 655 பேருக்கு தொற்று
புதுவையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 655 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 535, காரைக்காலில் 93, மாகியில் 27 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 99, காரைக்காலில் 15, மாகியில் 16 பேர் என 130 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் 3, மாகியில் 7 பேர் என 22 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்த மாக இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 866 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் ஆயிரத்து 809, காரைக்காலில் 349, ஏனாமில் 4, மாகியில் 63 பேர் என 2 ஆயிரத்து 225 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 2 ஆயிரத்து 355 பேர் கொரோனா தொற்றுடன் உள்ள னர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 14 லட்சத்து 76 ஆயிரத்து 572 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.