செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 2,63,533 பேருக்கு தொற்று

Published On 2021-05-18 04:13 GMT   |   Update On 2021-05-18 04:13 GMT
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,15,96,512 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4 லட்சத்தை கடந்து பதிவானது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது புதிய தொற்று குறைந்து வருகிறது. குணமடையும் விகிதம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,63,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,329 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,719 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,15,96,512 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,22,436 பேர் குணமடைந்துள்ளனர்.



நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 33,53,765 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 18,44,53,149 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News