ஆன்மிகம்
கூப்புச்சந்திரபேட்டை உற்சவம்

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம்

Published On 2021-03-01 06:47 GMT   |   Update On 2021-03-01 06:47 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத பவுர்ணமி அன்று மறுநாள் கூப்புச்சந்திரபேட்டை உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூப்புச்சந்திரபேட்டை கிராமத்தில் இந்த உற்சவம் நடந்தது.

முன்னதாக கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் உற்சவர்களான சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமசாமியை சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வைத்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கூப்புச்சந்திரபேட்டை கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். கிராமத்தை அடைந்ததும், அங்குள்ள மண்டபத்தில் கும்ப கலசம் ஏற்பாடு செய்து, உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூைஜகள், நைவேத்தியம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்து தர்ம பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் ஆகியவை சார்பில் திருப்பதியில் கோலாட்டம், பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
Tags:    

Similar News