உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இரணியல் அருகே 8 வயது சிறுமி மர்ம சாவு

Published On 2022-04-17 07:57 GMT   |   Update On 2022-04-17 07:57 GMT
இரணியல் அருகே 8 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
கன்னியாகுமரி:

இரணியல் அருகே ஞாறோடு பகுதியைச் சேர்ந்தவர் சுதீப் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கோபிகா. இவர்களுக்கு ஒரு மகனும் விபிஷா (8) என்ற மகளும் இருந்தனர். விபிஷா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் விபிஷா திடீர் என கூச்சலிட்டார். உடனே அவரது பெற்றோர் அவரை பார்த்தனர். அப்போது விபிஷா மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி விபிஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபிஷா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. எனவே பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.
Tags:    

Similar News