ஆன்மிகம்
தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.வேளாங்கண்ணி பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடி இருந்தனர். வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடி இருந்தனர். வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.