செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் இன்றும், நாளையும் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்துறை அறிவிப்பு

Published On 2021-05-08 12:46 GMT   |   Update On 2021-05-08 12:46 GMT
பயணிகள் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்றும், நாளையும் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். 

சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இன்று மற்றும் நாளை இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 

சிறப்பு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்கள் www/tnstc.in என்ற தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News