சுரண்டை அருகே மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் குலசேகர மங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்து சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ராஜேஸ்வரி குடும்பத்தாரிடம் சுரேஷ் வலியுறுத்தி வந்துள்ளார். நேற்றும் இது தொடர்பாக ராஜேஸ்வரியின் சகோதரர் ராஜேசிடம், சுரேஷ் பேசி உள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.