ஆன்மிகம்
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Published On 2021-03-22 08:08 GMT   |   Update On 2021-03-22 08:08 GMT
ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேவாரம் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார், கோவில் மேல்சாந்தி கிருஷ்ணன் பட்டர், கவுரவ ஆலோசகர்கள் ஈஸ்வர பிள்ளை, சோலை கணபதிப்பிள்ளை, தாணுபிள்ளை, துணைத்தலைவர்கள் இசக்கியப்பன், மேகலிங்கம், செயலாளர் பெருமாள், பொருளாளர் விநாயகம் மற்றும் உறுப்பினர்கள் முத்துராமன், சங்கரலிங்கம், முத்துசுவாமி, வீரபாகு, சக்திகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு சாஸ்தாவும், அம்பாளும் மற்றும் விநாயகரும் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) சாஸ்தாவும், அம்பாளும் பந்தல் வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சாஸ்தா மேஷ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சிறப்பு ஹோமம், பக்தி சொற்பொழிவு, சுவாமி பவனி வருதல் போன்றவை நடைபெறுகிறது. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சாஸ்தா இந்திர வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதல், இரவு 9 மணிக்கு சுப்பிரமணியசாமி மயில் வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

26-ந் தேதி இரவு 10 மணிக்கு சாஸ்தா யானை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதலும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு சுவாமியும் அம்பாளும், சாஸ்தாவும் அம்பாளும் பல்லக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் கற்பக விருட்ச வாகனத்திலும், சாஸ்தா அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவில் 28-ந் தேதி 9 மணி முதல் சாஸ்தாவை குதிரை வாகனத்தில் எழுந்தருளச் செய்தல், இரவு 7.30 மணிக்கு நடராஜர் சிதம்பரேஸ்வரர் வாகனத்திலும், ஆறுமுக நயினார் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு பதி வேட்டைக்கு சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவில் 29-ந் தேதி காலை 11 மணிக்கு மாடன் தம்புரான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழாவின் கடைசி நாளான 30-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வந்து வாகனம் வீதி உலா வருதல் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News