செய்திகள்
தற்கொலை

நீடாமங்கலத்தில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-10-16 10:29 GMT   |   Update On 2021-10-16 10:29 GMT
நீடாமங்கலத்தில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்:

நீடாமங்கலம் முத்தையா கொத்தனார் சந்தை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நீடாமங்கலம் கடைவீதியில் குடி தண்ணீர் பாட்டில் மற்றும் கேன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கண்மணி (வயது35). நேற்றுமுன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கண்மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கண்மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News