செய்திகள்
பரிசோதனைக்கு வந்த சாம்பிள்கள்

கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 10.13 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்

Published On 2020-10-24 05:31 GMT   |   Update On 2020-10-24 05:31 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 12.69 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ள  நிலையில், 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 10,13,82,564 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 12,69,479 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News