உள்ளூர் செய்திகள்
சின்னக்கரை பகுதியில் சாலை தடுப்பு வளைவை முறையாக பராமரிக்க கோரிக்கை
தற்போது ஆங்காங்கே விரிசல், வெடிப்புகள் தோன்ற ஆரம்பித்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் நால் ரோடு சந்திப்பு உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள பகுதி என்பதால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகின்றன. இதனையடுத்து ரோட்டின் நடுவே தடுப்பு வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கட்டப்பட்டு 2, 3 நாட்கள் ஆகியும் சரிவர சுற்று சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் தற்போது ஆங்காங்கே விரிசல், வெடிப்புகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. எனவே ரோடு தடுப்பு வளைவு முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.